Gold up on weak US dollar 07/09/2016

Gold up on weak US dollar
07/09/2016 08:53
Gold futures closed higher in the international market on Tuesday as a fall in the U.S. service-sector index to its weakest level in over six years appeared to diminish the likelihood of a U.S. interest-rate hike this month, fueling a drop in the dollar. The debate over the speed and aggressiveness of Fed interest-rate changes has been pinned to each economic release but the payrolls report carried additional weight for financial markets. Prospects for higher interest rates can boost the dollar and dull the appeal of greenback-priced gold. Rising rates also can turn off investors from precious metals, which don’t bear a yield.

Consumer optimism dips 4.6%; rural India sentiments rise 07/09/2016

Consumer optimism dips 4.6%; rural India sentiments rise
07/09/2016 17:36
The overall consumer sentiment in the country fell by 4.62 per cent even as rural population expressed increased optimism following a favourable monsoon during August, latest data shows.
Consumer sentiments on the current economic conditions fell by 5.25 per cent while their expectations regarding the future fell by 4.2 per cent during August, according to data on consumer sentiments by BSE and CMIE.
"India consumer sentiment index fell by 4.62 per cent to 96.1 in August 2016," BSE said in a statement.
While urban consumer sentiments fell by 1.06 per cent, the same in rural India rose positively by 1.08 per cent last month, compared to July this year.
Consumer sentiments in urban areas regarding the current economic conditions deteriorated by 1.83 per cent and consumer expectations regarding the future worsened by 0.57 per cent for the month, BSE said.
On the other hand, index for rural sentiments on current economic conditions grew by 0.46 per cent and increased by 1.46 per cent on future expectations.
"It is interesting to note that Indian consumers are more optimistic about their future than their own assessment of their current economic condition," BSE Managing Director and CEO Ashish kumar Chauhan said.
"This greater hope in the future is evident in both urban and rural regions. Thus, while the overall sentiments in rural and urban regions are divergent, their relative perception regarding their own future converges to unambiguous optimism," he said.

NITI Aayog in favor of strategic sale of 44 Central PSUs 07/09/2016


NITI Aayog in favor of strategic sale of 44 Central PSUs
07/09/2016 15:19
NITI Aayog has said that it has made a case for strategic sale in as many as 44 public sector undertakings where the government can reduce its holding below 50 per cent by selling its stake.
As per reports, NITI Aayog's recommendation of strategic sale of these PSUs is part of the task entrusted to it by the government to suggest ways to divest Centre's stake in profit-making as well as loss making and sick units.
Commenting on the issue, NITI Aayog CEO Amitabh Kant told the media, "NITI Aayog has already recommended about 44 companies for strategic sale and that is going through a process. Dipam (Department of Investment and Public Asset Management) is working on that, taking it forward.”
"But for us, it's an ongoing process, so we are looking at the second lot, the third lot and we will come out with recommendations," he added.
As per reports, under the strategic sale, government's stake is reduced to 0-49 per cent in a PSU which is also called privatisation.

Australia terms FTA negotiations with India as complicated 07/09/2016


Australia terms FTA negotiations with India as complicated
07/09/2016 15:18
According to media reports, the Australian government has signaled that the ongoing free trade negotiations (FTA) with India were “complicated” and that such a deal is no longer a major priority in the short term.
“On India, this is a complicated negotiation. Although the original aspiration was to knock it over in 12 months, that hasn't been possible. We're now in the process of undertaking a stocktake about where negotiations are at. So I'll keep pursuing India, but that's not our key priority”, Australia’s Trade Minister Steve Ciobo was quoted as saying to a TV channel in Melbourne, the PTI reported.
Instead, the top priority for the Australian government in the short term was to ink a FTA deal with Indonesia, which is already a significant economic and regional trading partner for Australia.
Ciobo’s comments come after Prime Minister Narendra Modi met his Australian counterpart Malcolm Turnbull on the sidelines of the recently held G20 summit in China.
India and Australia have been bidding to strike a Comprehensive Economic Cooperation Agreement (CECA) or FTA since 2011 as both sides look to bolster bilateral trade and investment.
Despite several rounds of negotiations aimed at liberalising trade and the services regime, eliminating non-tariff barriers and enabling investments, key differences in areas relating to duty cut on dairy products and wines have held back the conclusion of the negotiations.

RBI sets rupee reference rate at 66.3618 against US dollar 07/09/2016

RBI sets rupee reference rate at 66.3618 against US dollar
07/09/2016 13:15
The Reserve Bank of India today fixed the reference rate of the rupee at 66.3618 against the US Dollar and 74.6902 for the euro.
These rates were at 66.5469 and 74.1665 respectively on September 06, 2016, RBI said in a notification.
According to an RBI statement, the exchange rates for the pound and the yen against the rupee were quoted at 89.0376 and 65.46 per 100 yens respectively, based on reference rates for the dollar and cross-currency quotes at noon.
The SDR-rupee figure will be based on this rate, the statement added.

GST, banks and infra top govt. priorities: FM 07/09/2016

GST, banks and infra top govt. priorities: FM
07/09/2016 12:48
According to a report in media news agency Reuters, the country’s Finance Minister Arun Jaitley has stressed that the Modi government is stepping up efforts to accelerate progress on key tax reforms, fixing the ailing banking system and reviving stalled infrastructure projects, bolstering the outlook for Asia’s third biggest economy which expanded by 7.1 per cent in the April-June 2016 quarter.
Jaitley added that getting the Goods and Services Tax (GST) implemented on the target date of April 1, 2017 was among the top priorities of the Centre.
Touted as the country’s biggest tax reform since Independence, the GST will create a common market in India while also improve tax efficiency, and help bolster business and investor sentiment. India’s annual GDP could get an annual boost of up to 2 per cent under the new single indirect tax regime.
Jaitley underscored the need to revitalize the struggling banking sector grappling with a pile of toxic loans that have constrained credit growth. However, he dismissed any suggestions of selling off government stake in state-run lenders. The government is not planning to cut its stake in public sector banks below the threshold limit of 52 per cent, he said.
The Finance Minister also noted the urgency among policymakers to get stalled infrastructure projects moving that could provide immense benefits to the country’s 1.3 billion population.

India set to become pivot for high-tech manufacturing: UN 07/09/2016


India set to become pivot for high-tech manufacturing: UN
07/09/2016 12:29
India is on course to becoming a pivot for high-tech manufacturing amid favourable conditions for the growth of the sector in the wake of progress on key structural reforms, the United Nations has said in a new report.
“India's manufacturing output, which achieved impressive growth rates in the last quarters, experienced a second slight decline in a row but the prospects for India's manufacturing are conclusive, since India is on the path to becoming a pivot for high-tech world manufacturing”, the UN Industrial Development Organisation (UNIDO) said in its 'World Manufacturing Production report', published quarterly.
In India, manufacturing output rose by 9.1 per cent in the first quarter of the ongoing fiscal, year-on-year, which was slower than the 9.3 per cent growth reported in the January-March 2016 quarter.
Even as the UN is optimistic over India’s manufacturing growth, it sees global manufacturing expansion slowing this year amid reduced financial support for productive activities.
Global manufacturing output is likely to rise by a tepid 2.8 per cent in 2016, the report said. Manufacturing growth in advanced nations is set to stand at a paltry 1.3 per cent this year, with that in developing countries at 4.7 per cent.
Asia seems to be becoming the new powerhouse of global manufacturing, with the region clocking an impressive 6.5 per cent growth in manufacturing output in the second quarter of 2016.

RBI reallocates deputy governor portfolios 07/09/2016

RBI reallocates deputy governor portfolios
07/09/2016 12:28
The Reserve Bank of India (RBI) said that it will reallocate the portfolios for its three deputy governors, including shifting the monetary policy, economic policy & research, and financial market operations to R. Gandhi.
The three divisions were previously held by Urjit Patel, a deputy governor who was promoted to RBI chief on Sunday to replace Raghuram Rajan.
Other divisions under Patel were also reassigned, with the department of communication assigned to Deputy Governor N.S. Vishwanathan, and the department of statistics and information management going to S.S. Mundra. The government is expected to announce a replacement for Patel as a deputy governor soon, which would likely lead to another rejigging of portfolios.

NABARD to raise Rs 77 k cr to fund irrigation projects 07/09/2016

NABARD to raise Rs 77 k cr to fund irrigation projects
07/09/2016 12:04
The National Bank of Agriculture and Rural Development (NABARD) will raise in phases over Rs 77,000 crore from market to fund around 100 prioritised irrigation projects, including 56 in drought-prone areas, under the Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKYS) over the next four years.
Union Minister Uma Bharti made the announcement during the signing ceremony of a memorandum of agreement (MoA) between the Ministry of Water Resources and NABARD for raising a long-term irrigation fund (LTIF) of Rs 20,000 crore.
To a question, a senior official said the remaining Rs 57,000 crore would be raised through NABARD in case states fail to pool their share of fund for completing the irrigation projects.
Bharti said the government has decided to irrigate an estimated area of 76.03 lakh hectares with more focus on increasing irrigation potential utilisation.
Of the total projects, 26 will be completed in Maharashtra. In Madhya Pradesh and Telangana, 14 and 11 irrigation projects will be completed respectively.
“This is a historic moment when we are preparing to irrigate over 70 lakh hectares of land (by signing the MoA). These projects will help address concerns in drought-hit areas. The respective states too have been cooperative,” she said during the ceremony.
Speaking about the role of NABARD, its chairman H K Bhanwal said the bank will provide Rs 20,000 crore for 23 irrigation projects to be constructed in phase 1 of the PMKSY by March 2017.
“We are raising around Rs 13,000 crore shortly from the market,” Bhanwal said.
Another 31 projects have been identified to be completed by 2017-18 in phase II and the remaining 45 projects are planned to be completed by December 2019.

Panel asks Govt to share service tax with Railways: Reports 07/09/2016


Panel asks Govt to share service tax with Railways: Reports
07/09/2016 10:02
A Parliamentary Panel has said that it has recommended sharing with Railways the service tax paid on passenger fares on specified classes and freight which is collected by Finance Ministry and pursuing the matter vigorously with the authorities concerned. In its latest report, the Standing Committee on Railways has noted that service tax on specified classes of passenger and freight was to the tune of Rs 1478.10 crore and Rs 3449.34 crore during 2012-13 and 2013-14, respectively. As per reports, although several requests have been made to Finance Ministry for exemption from payment of service tax on freight and fare, these were not agreed to by the Ministry. As per reports, the Committee, headed by TMC MP and former Railway Minister Dinesh Trivedi, had also noted that the concessions given by the Railways on various categories should also be taken up with the ministries concerned. Furthermore, the panel noted that the Railways had to pay four per cent dividend to general revenues, which was about Rs 10,000 cr from their internal generation in 2015-16, thus severely restricting expenditure on creation of assets.

ESIC to raise monthly wage threshold to Rs 21,000 07/09/2016

ESIC to raise monthly wage threshold to Rs 21,000
07/09/2016 10:01
The Employees' State Insurance Corporation (ESIC) has said that it has raised the monthly wage threshold to Rs 21,000, from the current Rs 15,000, for coverage under its health insurance scheme. As per reports, the ESIC board also decided to give an option to existing insured persons to continue membership even if their wage breaches the ceiling of Rs 21,000 per month. At present, all those insured under the ESIC scheme lose their membership of ESIC as well as that of the insurance cover if their wage overshoots the ceiling. At present, ESIC has 2.6 crore insured persons, which covers over 10 crore people, assuming four members of a family. Commenting on the issue, the Labour Minister also said that there was a plan to increase the wage threshold for retirement fund body EPFO subscribers and it may be considered in the next meeting of the Central Board of Trustees (CBT). At present, the wage threshold is Rs 15,000 per month for coverage under its social security scheme.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி?

பாலிசிதாரர்களுக்குப் பயன் அளிக்குமா ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி?


ஒரு நிறுவனத்தில் எடுத்த செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. இதேபோல, ஒரு நிறுவனத்தில் எடுத்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி வந்திருக்கிறது.

இதை இன்ஷூரன்ஸ் போர்ட்ட பிலிட்டி என்கிறார்கள். அதாவது, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் அந்த நிறுவனத்தில் சேவைக் குறைபாடு இருந்தால், அந்த பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை ஐஆர்டிஏ இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தினாலும், அது குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் குறை வாகவே உள்ளது. இந்த புதிய வசதியின் கீழ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எப்படி மாற்றுவது என்பது குறித்துப் பார்ப்போம்.

ஏன் போர்ட்டபிலிட்டி?

இந்தியாவில் பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. ஒரு நிறுவனத்தில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்தபின் அதன் சேவை திருப்திகரமாக இல்லை எனில், அந்த பாலிசியை வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. தவிர, நீங்கள் ஏற்கெனவே எடுத்த பாலிசியில் இருந்த வசதிகள், நிறுவனம் மாறியபின்னும்  கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 முக்கியமான 45 நாட்கள்!

ஏற்கெனவே உள்ள இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிப்பதற்கு 45 நாட்களுக்குமுன் இந்த வசதியைப் பயன்படுத்தி, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசியை மாற்றிக் கொள்ள முடியும். தனிநபர், ஃப்ளோட்டர் பாலிசிகளில் மட்டும் இல்லாமல் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணமாக, வேலை பார்க்கும் நிறுவனத்தில் வைத்திருக்கும் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் குடும்ப உறுப்பினர்களுக்கான கவரேஜ் இருக்கும். இதில் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும் போது குடும்ப உறுப்பினர்களுக்குக் கவரேஜ் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில், குரூப் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கும் நிறுவனத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு, போர்ட்டபிலிட்டி வசதியின் கீழ் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். குரூப் இன்ஷூரன்ஸ் இருக்கும் நிறுவனத்தில் தான் இந்த பாலிசியை எடுக்க முடியும். வேறு நிறுவனத்தில் பாலிசி எடுக்க இந்த  போர்ட்டபிலிட்டி வசதியைப் பயன் படுத்த முடியாது.



மேலும், ஏற்கெனவே பாலிசி வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் நோ-க்ளெய்ம் இருந்தால், அதை இழக்க நேரிடும். அதாவது,       நோ-க்ளெய்ம் போனஸ் மூலமாகக் கூடுதல் கவரேஜ் வைத்திருந்தால், அந்த மொத்த கவரேஜூக்கான பிரீமியத்தைப் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனம் வசூலிக்கும். ஏனெனில், நோ-க்ளெய்ம் போனஸ், பிரீமியத்தில் தள்ளுபடி என்பதெல்லாம் ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் வித்தியாசப்படும்.

 என்ன வசதி?

போர்ட்டபிலிட்டியை பயன்படுத்தி பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றும்போது காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் போன்றவை அப்படியே புதிய பாலிசிக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, சில நோய்களுக்குக் காத்திருப்புக் காலம் 4 ஆண்டு என வைத்துக்கொள்வோம். ஏற்கெனவே உள்ள நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பாலிசி வைத்திருந்தால், புதிய நிறுவனத் தில் மீதமிருக்கும் ஒரு வருடம்தான் காத்திருப்புக் காலமாக இருக்கும்.

 எப்போது மாறலாம்?

இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் சேவையில் ஏதாவது குறைபாடு இருக்கும்போது இந்த வசதியைப் பயன்படுத்தலாம். அதாவது, ஒவ்வொரு முறை க்ளெய்ம் செய்யும்போதும் காலதாமதம் ஏற்படுவது, நெட்வொர்க் மருத்துவமனை குறைவாக இருப்பது, இலவச தொலைபேசி சேவையில் சிக்கல், டிபிஏயின் தவறான அணுமுறை போன்ற சமயங்களில் இந்த வசதியைப் பயன்படுத்தி, நிறுவனம் மாறலாம்.

போர்ட்டபிலிட்டி வசதியைப் பயன்படுத்தி, பாலிசியை மாற்றும்முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்ஷூயூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் சம்பத்திடம் கேட்டோம்.

 மாறும்முன்..!

“இன்ஷூரன்ஸ் பாலிசியில் போர்ட்டபிலிட்டி வசதியை பெரும்பாலும் வயது அதிகரிக்கும்போது தான் மாற்றுவோம். அந்த சமயத்தில் பாலிசிதாரர்களின் ரிஸ்க் அதிகரித் திருக்கும். பிரீமியமும் வித்தியாசப்படும். அதாவது, ஏற்கெனவே உள்ள நிறுவனத்தில் இருந்த பிரீமியம் புதிய நிறுவனத்தில் இருக்காது. எனவே, பாலிசியை மாற்றும்முன் புதிய பாலிசிக்கான பிரீமியத்தைக் கவனிப்பது நல்லது. சில நேரங்களில் அதிக ரிஸ்க் உள்ளது என உங்களின் பாலிசியை நிராகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

போர்ட்டபிலிட்டிக்கு விண்ணப்பம் செய்த 7 நாட்களுக்குள் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதில் ஏதாவது காலதாமதம் ஏற்பட்டா லும் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது. தகவல்கள் பகிர்ந்து கொண்ட 15 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களை நிறுவனம் தெரிவிக்க வேண்டும். அதாவது, பாலிசியை வழங்குகிறார்களா, இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும்’’ என அனைத்து விதிமுறைகளையும் கூறினார்.

 பிரீமியம்!

பழைய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியமும், புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியமும் வித்தியாசப் படுவதற்கான வாய்ப்புள்ளது. அதாவது, உங்களின் ரிஸ்க் அடிப்படையில் இந்த பிரீமியம் இருக்கும். எனவே, பாலிசியை மாற்றுவதற்குமுன் பிரீமியம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

 கவரேஜ்!

ஏற்கெனவே பாலிசியில் உள்ள கவரேஜ் தொகை, காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் ஆகியவை அப்படியே இருக்கும். ஆனால், பிற கவரேஜ் அதாவது, ஒரு சில நோய்களுக்காகக் கவரேஜ் தொகையில் கோ-பேமென்ட், சில மருத்துவப் பொருட்களுக்கு க்ளெய்ம் இல்லை போன்றவை இருக்கும்.

 பிற வசதி!

போர்ட்டபிலிட்டி வசதியின் கீழ் பாலிசியை மாற்றும்போது புதிய நிறுவனத்தில் நெட்வொர்க் மருத்துவமனைகள் அதிகம் உள்ளதா, கேஷ்லெஸ் வசதி இருக்கிறதா, அறை வாடகைக்கான சதவிகிதம் என்ன, பாலிசியைப் புதுப்பிப்பதற்கான கால அளவு என்ன?, எந்தெந்த நோய்களுக்குக் கோ-பேமென்ட் உள்ளது, எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும், க்ளெய்ம் நடைமுறை என்ன என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தபிறகு பாலிசியை மாற்றுவது நல்லது.

பிஸ்கட் தயாரிப்பு,ஏற்றுமதியும் செய்யலாம்!

பிஸ்கட் தயாரிப்பு,ஏற்றுமதியும் செய்யலாம்!


வாரம் ஒரு தொழில்!



நொறுக்குத் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது.

தவிர, சில மாதங்கள்வரை வைத்திருந்து விற்றாலும் பொருள் கெடாது என்பது இதிலுள்ள இன்னொரு பெரிய பிளஸ் பாயின்ட். விதவிதமான சுவையோடு, தரமாகவும் பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு நம்மூர் பேக்கரிகள் நல்ல உதாரணம். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு இத்தொழிலில் சாதிக்க வும் நிறையவே வாய்ப்புள்ளன.

சந்தை வாய்ப்பு!



பெருநகரம், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்கள் என சந்தை வாய்ப்புகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் சந்தையை பிராண்டட் தயாரிப்புகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், கிராமப்புற மற்றும் மிகச்சிறிய நகரங்களின் சந்தையை லோக்கல் தயாரிப்புகள்தான் கைகளில் வைத்திருக்கின்றன. புதிதாக தொழிலில் இறங்கும்போது இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சுலபம். முக்கியமாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம், டீக்கடைகள், நெடுஞ்சாலை உணவகங்கள் போன்ற இடங்களில் அதிகளவிலான விற்பனை வாய்ப்புகள் உள்ளது. 50-60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இதுபோன்ற இடங்களை மையப்படுத்தி டெலிவரி வேன் மூலம் விற்பனையைப் பெருக்கலாம்.
தயாரிப்பு முறை!

சுலபமான தயாரிப்பு முறைதான். கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சர்க்கரை, பால், வனஸ்பதி,  போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு 'டவ் மெஷின்’ மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும். பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, பாக்கெட்களில் அடைத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.

தரக்கட்டுபாடு

உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெறவேண்டும்.

நிலம் மற்றும் கட்டடம்!

இந்தத் தொழிலுக்கு குறைந்த பட்சம் 800 சதுரஅடி இடம் தேவைப்படும். நிலமாக வாங்கி கட்டடம் கட்டுவதற்குப் பதிலாக, கட்டடமாக வாங்குவது நல்லது. தேர்ந்தெடுக்கும் இடத்துக்கேற்ப விலை நிலவரம் இருக்கும். பிஸ்கெட் தயாரிக்க 400 சதுர அடி இடமும் மீதமுள்ள இடத்தில் பேக்கிங் மற்றும் சில்லறை விற்பனை செய்வதற்கும் பயன் படுத்தலாம். இதற்கு ரூபாய் 1.25  லட்சம் வரை செலவாகும்.

இயந்திரம்!

ஐம்பது டன் உற்பத்தி என்ற இலக்கு வைக்கலாம். ஆண்டுக்கு 330 வேலை நாட்கள், தினமும் 12-14 மணி நேரம் வேலை செய்தால் இந்த இலக்கை எட்டலாம். இயந்திரங்கள் புதுடெல்லி, செகந்தராபாத் போன்ற இடங்களில் கிடைக்கும். சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் மாவு பிசைவதற்கு வேலை ஆட்கள் வைத்துக் கொள்ளலாம். இது செலவை சற்று குறைக்கும்.


கூடுதல் செலவுகள்!

தயாரிப்பு செலவு மட்டுமல்லாமல் ஃபர்னிச்சர், அளவை சரி பார்க்கும் இயந்திரம், பேக்கிங் செய்ய, ஸ்டோர் செய்து வைக்க என்ற வகையில் 90,000 ரூபாய்வரை செலவாகும். தினமும் 20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் தேவை.

மூலப் பொருள்கள்!

கோதுமை மாவு, மைதா மாவு, ஈஸ்ட், நெய் அல்லது வனஸ்பதி, சர்க்கரை, பால் அல்லது பால் பவுடர், உப்பு மற்றும் உணவு கலர் இவைதான் மூலப்பொருள். எல்லாமே தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய பொருள்தான்; அதனால் உற்பத்தியில் தொய்வு இருக்காது.

வேலையாட்கள்!

முன்னனுபவம் உள்ள நபர் - 1

உதவியாளர்கள் - 2

விற்பனையாளர் - 1

வேன் அல்லது சிறிய ஆட்டோ ஓட்டத் தெரிந்த விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஐந்து நபர்கள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்.


உற்பத்திக்கு முந்தைய செலவுகள்!

நிர்வாகச் செலவுகள், சட்டப்பூர்வமான கட்டணங்கள், தொழில் தொடங்குவதற்கு முந்தைய முதலீட்டுக்கான வட்டி என 50,000 ரூபாய் செலவாகும்.

மானியம்

இத்தொழில் சிறுதொழிலுக்கு கீழ் வருவதால் மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கும்.

சுறுசுறுப்பாக செயல்பட நினைக்கும் இளைஞர்களுக்கு ஏற்ற தொழில் இது என்பதால் இதில் தாராளமாக இறங்கி, முன்னேற்றம் காணலாம்!


'அவசரத்துக்குப் பசியைத் தணிக்கவும், நொறுக்குத் தீனியாகவும் பிஸ்கெட் சாப்பிடும் பழக்கம் இருப்பதால் இந்தத் தொழிலுக்கு எப்போதுமே டிமாண்ட்தான். அதேநேரத்தில் பெரிய எம்.என்.சி. நிறுவனங்களும் லோக்கல் பிராண்ட்களுக்கு நிகராக குறைந்த விலையில் விற்பனை செய்ய இறங்கிவிட்டதையும் சமாளிக்க வேண்டும். விதவிதமான சுவைகளுடன், வித்தியாசமான மார்க்கெட்டிங் உத்திகளோடு இறங்கினால் இந்தப் போட்டியை சமாளிக்கலாம், தனியரு அடையாளமும் பெறலாம். அத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. தென்ஆப்பிரிக்க நாடுகளில் நமது தயாரிப்புகளை விரும்பி வாங்குகின்றனர்.

இந்த பிஸினஸில் இருக்கும் டிமாண்டை போலவே சில ரிஸ்க்கான விஷயங்களும் இருக்கிறது. முன்பு சிறுதொழிலாக பிஸ்கெட் தயாரிப்பவர்களுக்கு மானிய விலையில் கோதுமை, மைதா, சர்க்கரை போன்ற மூலப்பொருட்களை அரசு கொடுத்து வந்தது. ஆனால், தற்போது மானிய விலையில் கொடுப்பதில்லை. மூலப்பொருட்களின் விலை ஏறியுள்ளதால் மீண்டும் மானிய விலையில் அவைகளை வழங்கினால் ஏற்றுமதி செய்வதற்குக் கூடுதல் பலனாக இருக்கும். இந்த ரிஸ்க் அனைத்தையும் சமாளித்து பிஸ்கெட் தயாரிப்பில் நிலைத்துவிட்டால் நீங்களும் பிராண்டட் நிறுவனமாக வளரலாம்.''

வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ், ராம்ராஜ் காட்டன்.

வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ், ராம்ராஜ் காட்டன்.



சில வருடங்களில் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து பிஸினஸ் செய்யலாம் என தனியாக வந்தோம்.  நண்பர் உற்பத்தியைக் கவனிக்க, நான் மார்க்கெட்டிங் செய்தேன். இந்த வேலைக்காக தென் மாநிலங்களிலும் ஊர் ஊராகவும் அலைந்து ஆர்டர் வாங்கினேன். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய நிலை. நிறுவனத்தைப் பிரித்தபோது எனது பங்காக 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வேஷ்டிகளை என்னிடம் தந்தார். அதை விற்று காசாக்க மீண்டும் மார்க்கெட்டிங் வேலையில் இறங்கினேன். கையில் இருக்கும் வேஷ்டிகளை விற்று முடித்தாலும், புதிய ஆர்டர்களையும் விட  முடியவில்லை. பல இடங்களிலிருந்தும் வேஷ்டி வாங்கித் தந்தேன்.
அடுத்தவரிடமிருந்து வாங்கித் தருவதற்குப் பதில் நாமே தயாரித்தால் என்ன என்று நினைத்து வேஷ்டி தயாரிப்பில் இறங்கினேன். வேஷ்டி என்றாலே கைத்தறிதான் என்பதை மாற்றி, விசைத்தறி மூலம் வெவ்வேறு ரகங்களில் தந்தேன். எளிமையாக, வாங்கக்கூடிய விலையில் தரமாக கிடைத்த வேஷ்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
வேஷ்டி தயாரிப்பில் இருந்ததால் நான் எங்கு சென்றாலும் வேஷ்டியில்தான் செல்வேன். பல இடங்களில் வேஷ்டி கட்டி சென்றதால் பல அவமானங்களையும் சந்திக்க நேர்ந்தது. வேஷ்டியை பாரம்பரியமான உடை என்று சொன்னாலும், பொது இடங்களில் வேஷ்டி கட்டி செல்பவர்களுக்கு சரியான மரியாதை இல்லை என்பதை உணர்ந்தேன். அதை மாற்றினால்தான் வேஷ்டி தொழிலில் ஜெயிக்க முடியும் என்று நினைத்து, அதற்காக வேலை செய்தேன். வெற்றி பெற்றவர்கள் விரும்பிக் கட்டுவது வேஷ்டி என்று விளம்பரங்கள் செய்தேன்.
வேஷ்டி என்றாலே வெள்ளைவெளேர் என்று ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை மாற்றி, பல்வேறு வகைகளிலும் தந்தோம். ஒவ்வொரு பகுதி மக்களும் விரும்பிக் கட்டும் வேஷ்டி ரகங்களை ஆராய்ந்து அதற்கேற்ப தயாரித்துக் கொடுத்தோம். இன்று 2,008 ரகங்கள் உற்பத்தி செய்கிறோம். வேஷ்டியையும், வேஷ்டி கட்டுபவர்களையும் தாழ்வாக நினைத்த நிலையை மாற்றி, வேஷ்டி கட்டுவதைக் கவுரவமாகவும், வேஷ்டியை ஒரு பிராண்டாகவும் மாற்றியதுதான் எங்கள் சாதனை.''

வங்கிக் கணக்கு ஜாக்கிரதை !

வங்கிக் கணக்கு ஜாக்கிரதை !



கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்யத் தயங்குபவர்கள், தவறாமல் பர்ஸில் வைத்திருப்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத்தான். இந்த இரண்டுமே பாதுகாப்பானவை என்று நினைக்கிறார்கள் பலர். ஆனால், இந்த இரண்டு கார்டுகளையும் நாம் பத்திரமாக வைத்துக்கொள்ளவில்லை எனில், நம் பணம் களவுபோக நிச்சயம் வாய்ப்புண்டு. இந்த இரண்டு கார்டுகளை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இனி பார்ப்போம்.

டெபிட் கார்டு என்கிற தொழில்நுட்பமே அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதல்ல. நீங்கள் ஸ்வைப் செய்யும் பாதுகாப்பு குறைவான இடங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பயன்படுத்தி எளிதாக போலி கார்டுகளைத் தயாரித்துவிட முடியும். நீங்கள் பெட்ரோல் போடும் இடத்திலோ அல்லது மால்களில்  ஷாப்பிங் செய்யும் போதோ அல்லது ஹோட்டல்களில்  உணவருந்தும்போதோ உங்கள் டெபிட் கார்டில் இருக்கும் ரகசியத் தகவல்களை எளிதாக எடுத்துவிட முடியும். சில சமயம் உங்கள் வங்கி ஏடிஎம் மையங்களில் கார்டை நுழைக்கும் இடத்தில்கூட இந்த மோசடிக்காரர்கள் சிறிய அளவிலான ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி தகவல்களையும் பெர்சனல் பின் நம்பரையும் திருடிவிடுவார்கள்.

டெபிட் கார்டில்தான் இந்தப் பிரச்னையா என்றால், கிரெடிட் கார்டிலும் இதேபோன்ற குறைபாடுகள் உள்ளன. ஆனால், டெபிட் கார்டில் நம் பின் நம்பரை கேட்காமலேயே பணப் பரிவர்த்தனை செய்யும் ‘பைபாஸ்’ வசதி இருக்கிறது. கிரெடிட் கார்டிலும் இந்த வசதி இருந்தது. தற்போது அப்டேட் செய்யப்பட்ட கார்டுகளில் உங்கள் பின் நம்பரை கட்டாயம் தந்தால் தான் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும்.



உங்கள் கிரெடிட் கார்டின் பின் நம்பர் தெரிந்தால், அதை வைத்து புதிய கிரெடிட்   கார்டை குளோனிங் முறையில் தயாரித்துவிட முடியும். இதை வைத்து உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுத்துவிட முடியும்.

எப்படி பாதுகாப்பது?

பொது இடங்களில் உங்கள் கண்களுக்கு எதிரே வைத்து கார்டுகளை ஸ்வைப் செய்ய அனுமதியுங்கள். கூடியமட்டும் நீங்களே பின் நம்பரை பதிவு செய்யுங்கள். மறைவான இடத்துக்குச் சென்று கார்டை ஸ்வைப் செய்வதை அனுமதிக் காதீர்கள்.

கார்டுகளை ஸ்வைப் செய்யும் கருவியின்மேல் ஏதாவது தனி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள். அப்படி பொருத்தப் பட்டிருந்தால் அது ஸ்கிம்மர் கருவியாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியொரு சந்தேகம் உங்களுக்கு வரும்பட்சத்தில், உங்கள் கார்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் பொருட்களை வாங்கும் கடைகளிலோ, பொது இடங்களிலோ வெளிப்படையாக உங்கள் பின்நம்பரை கூறாதீர்கள். அந்தக் கடைக்காரரோ அல்லது அருகில் இருப்பவரோ உங்கள் பின் நம்பரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

பின் நம்பர் இல்லாமலே பைபாஸ் செய்து உங்கள் கணக்கிலிருந்து வேறு ஒரு கணக்குக்கு ஆன்லைன் மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால், அதை செய்ய முடியாதபடிக்கு உள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இன்டர்நெட் பேங்கிங்!

கிரெடிட், டெபிட் கார்டுகள் ஆபத்தானவை. எனவேதான், நான் வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் வசதியை ஆக்டிவேட் செய்துள்ளேன். இதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று நினைக்கிறார்கள் சிலர். ஆன்லைன் ஹேக்கர்கள் மூலம் ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

என்ன பிரச்னை?

உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் பயன்படுத்தும் கணினியை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தாலும், இன்டர்நெட்டில் தோன்றும் விளம்பரங்கள் சில பிரபல இ-மெயில் தளங்களைப் போன்றும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த போலி இணையதளங்கள் ‘பிஷ்ஷிங்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் இ-மெயிலின் பாஸ்வேர்டு தெரிந்து கொண்டால் போதும். உங்கள் பெர்சனல் விஷயங்கள் அனைத்தும் திருடப்படுவதற்கு வாய்ப்புண்டு.

இந்தத் தளங்களில் சென்று நீங்கள் ஆன்லைனில் உங்கள் வங்கிக் கணக்கு விவரத்தையோ அல்லது கார்டுகளின் விவரத்தையோ அளிக்கும்போது, அது அவர்களது ஹேக்கிங் தளமாக இருக்கும் பட்சத்தில், பதிவாகிய தகவல்களை அவர்கள் எளிதாக எடுத்துவிடுவார்கள். நீங்கள் அவசரத்துக்காக அருகில் உள்ள ஒரு பிரவுஸிங் சென்டருக்குச் சென்று ஒரு வங்கிப் பரிவர்த்தனை செய்ய நேரிடலாம். ஒருவேளை அந்த பிரவுஸிங் சென்டர் ஸ்கிரீன் கேப்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீங்கள் கணினி திரையில் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கலாம்.

எப்படி பாதுகாப்பது?

அலுவலக அல்லது வீட்டு கணினிகளைப் பயன்படுத்தும்போது,  இ-மெயில் அல்லது ஷாப்பிங் இணையதளங்களை பார்வையிட, அதன் பாஸ்வேர்டை  நீங்களே டைப் செய்து உள்நுழைவது சிறந்தது. பொது பிரவுஸிங் சென்டரில் லாக் இன் செய்யும்போது கவனமாக உங்கள் அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு ‘ஹிஸ்டரி’யில் பதிவான பதிவுகளை அழிக்கத் தவறாதீர்கள். அதோடு நிற்காமல் பிரவுஸர் அமைப்பில் உள்ள குக்கீஸ் பதிவுகளையும் டெலிட் செய்துவிட்டு செல்லும்போது உங்கள் பாஸ்வேர்டு திருடப்படுவது தவிர்க்கப்படும்.



நீங்கள் பயன்படுத்தும் கணினியில் நீங்கள் மவுஸை நகர்த்தாமல் கர்ஸர் எங்காவது நகர்கிறதா என்று கவனியுங்கள். அப்படி இருந்தால், உடனே அந்த கணினி மையத்தில் பிரவுஸிங் செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில், அந்த மையம் உங்களை ஸ்கிரீன் கேப்சரிங் அல்லது ஸ்கிரீன் வியூவர் மூலம் கண்காணிக் கிறது என்று அர்த்தம்.

உங்கள் செல்போனில் நீங்கள் இ-மெயில் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளை இணைத்து வைத்திருந்தால், அதனை யாரிடமும் காட்டாதீர்கள். இன்று பெரும்பாலான போன்களில் உள்ள ஷோ பாஸ்வேர்டு ஆப்ஷனைப் பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை எளிதாக எடுக்கலாம் என்பதால் அதில் கவனமாக இருங்கள்.

பேங்கிங் ஆப்ஸ்!

கார்டுகள், இன்டர்நெட் இவையெல்லாம் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இதனால் இனி இவற்றைவிட்டு நான் என் கையில் பாதுகாப்பாக உள்ள செல்போனில் மொபைல் பேங்கிங் ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தப் போகிறேன் என்பவர்களுக்கும் சிக்கல் உள்ளது.

என்ன பிரச்னை?

வங்கிகளின் பெயரிலேயே போலி ஆப்ஸ்கள் வலம்வர தொடங்கியுள்ளன. இந்த ஆப்ஸ்கள் உங்கள் வங்கியின் அமைப்பைப் போலவே இருக்கும் என்பதால், உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் இந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்துவிட்டால், இதில் நீங்கள் பதிவு செய்யும் உங்கள் வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. இந்த போலி ஆப்ஸ்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவிவருவதால் உங்கள் கணக்கின் விவரங்கள் போலி ஆப்ஸ் தயாரிப்பவர்கள் கையில் சிக்க அதிக வாய்ப்புள்ளது.

எப்படி பாதுகாப்பது?

ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யும்போது உங்கள் வங்கியை அணுகி சரியான ஆப்ஸுக்கான லிங்கை பெற்று டவுன்லோடு செய்வது சிறந்தது. அதை டவுன்லோடு செய்யும்முன், அது உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ சேனல் என்றால் மட்டும் டவுன்லோடு செய்யுங்கள்.

இப்படி நீங்கள் செய்யும் வங்கி பணப் பரிவர்த்தனை வசதிகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டில் இருந்து சமயோஜிதமாக யோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே உங்கள் பணம் திருடப்படுவதைத் தடுக்க முடியும். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள்

பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்!

பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்!


சமீபத்திய சென்னைப் பெருமழையில் வீடு, கார் சேதமானதுடன், பலரது விலை மதிப்பற்ற ஆவணங்களும் தண்ணீரில் நனைந்து நாசமாகின. பல இடங்களில் உடனடி ஆவணங்கள் வழங்கும் முகாம் நடத்தி, பலரது ஆவணங்களை தரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மழை, வெள்ளம், தீ என எந்தவிதமான இன்னல்கள் வந்தாலும் அதிலிருந்து உங்கள் ஆவணங்கள் எந்த வகையிலும் தீங்கு விளையாமல் பத்திரமாக வைத்திருப்பதற்கான வழி இப்போது பிறந்துள்ளது, அதுவும் இலவசமாக நயா, பைசா செலவில்லாமல்.

டிஜி லாக்கர் (Digi Locker) எனப்படும் இணையப் பெட்டகம்தான், நம்மிடம் இருக்கும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கும் புதுமையான வழி. இது ஆன்லைனில் இயங்குவதாகும் (Online Document Storage Facility). இதன் மூலம் நீங்கள் எந்தவொரு பிரச்னையும் இன்றி ஆவணங்களைப் பாதுகாத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தேவைப்படும் நபருக்கோ, துறைக்கோ அனுப்ப முடியும்.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஆவணங்களையும் தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘பேப்பர் இல்லா செயல்பாடு’    (Paperless Governance) என்கிற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் டிஜிட்டல் (Digital India) திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி தரப்பட்டிருப்பதுதான் இந்த டிஜி லாக்கர்.



தேவைகள்!

இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த உங்களிடம் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்த ஆதார் எண்ணும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணும் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அவர்களது இருப்பிட உறுதிக்கென பிற ஆவணங்களை கொடுத்து அதன் சரிபார்ப்பிற்கு பின்னர் இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த முடியும்.

பதிவு செய்வது அவசியம்!

இந்த டிஜி லாக்கரில் பதிவு செய்த பின்புதான் இந்தப் பெட்டகத்தை நீங்கள் பயன்படுத்த இயலும். இதற்கென இருக்கும் இணையதளத்திற்குச் சென்று (www.digilocker.gov.in),  உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்தபின்பு, நீங்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கு ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். உடனடியாக அந்த பாஸ்வேர்டு பதிவு செய்தபின்பு நமது கணக்கு ஒன்று, இதர விவரங்களை தெரிவித்தவுடன் திறக்கப்படும். பின்னர் உங்களது யூசர் நேம் (User Name) பாஸ் வேர்டைக் குறிப்பிட்டு உங்களுக்கான இந்தப் பெட்டகத்தை பயன்படுத்தலாம். ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, மின் வருடல் மூலமான ஆவணங்களாக இணையப் பெட்டகத்தில் இணைக்கப்படும்.

ஆவணங்களின் சேமிப்பு!

நமது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, இந்த இணையப் பெட்டகத்தில் ஃபைல்களாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவைகள் தனித்தனியே சேமித்து வைக்கப்படும் விதமாக, உங்களால் பதிவேற்றம் செய்விக்கப்படும் ஆவணங்கள், அப்போதே தனித்தனி ஃபைல்களில் உங்கள் ஆதார் எண்ணின் தனித்துவத்தின்படி சேமிக்கப்படும்.

எல்லாம் முடிந்து இந்தப் பெட்டகத்தில் உள்ள உங்கள் சுய விவரப்பக்கத்துக்கு சென்றால், அதில் உங்கள் புகைப்படம், பெயர், முகவரி போன்ற ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது நீங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து விவரங்களும் அந்த இணையதளத்திலிருந்து பெறப்பட்டு இங்கு பகிரப்பட்டிருக்கும்.

அளவு!

தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம். கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்து இதன் அளவும் உயர்த்தப்படவுள்ளது.



பாதுகாப்பு!

இது அனைத்து வகையிலும் பாதுகாப்பும் கொண்ட ஒரு சிஸ்டம். இதன் அமைப்பு மற்றும் மையமானது ஐஎஸ்ஓ 27001 (ISO 27001) சான்றிதழ் பெறப்பட்டதால், உங்கள் தனித்துவம் முழுவதுமாக பாதுகாக்கப்படும். அனுமதி இல்லாத பிற நபர்களின் பயன்பாடு ‘தானியங்கி நேரப் பாதுகாப்பு’ (Auto Time Log-Out) மூலம் தடை செய்யப்படும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பயனாளர் மட்டுமே இந்தப் பெட்டகத்திலிருந்து பயன்படுத்த முடியும். ஆதார் எண் இணைக்கப்படாதபட்சத்தில் பயனாளர்களின் ஆவணப் பிரிவில் ஆவணங்கள் இணைக்கப்பட்டதே காட்டப்படாது.

ஆவணங்களின் பயன்பாடு!

இணைய கையெழுத்து (e-Sign) எனும் தொழில்நுட்பம் இந்த இணையப் பெட்டகத்தில் முழுமையான அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கம்பெனி பதிவகங்கள் மற்றும் வருமான வரித்துறைகளில்தான் இந்த இணைய கையெழுத்து பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த டிஜி லாக்கரில் இணைய கையெழுத்து தொழில்நுட்பம் இந்தப் பெட்டகத்தில் உள்ள ஃபைல்களையும், ஆவணங்களையும், கையெழுத்து செய்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களைக்கூட இந்த முறையில் அனுப்ப முடியும். மேலும், ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பெட்டகத்தில் இருந்து பதிவேற்றி நேரடியாக அனுப்ப இயலும். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்.



கூகுள் போன்ற இதர தளங்களிலிருந்து செய்யப்படும் அவ்வாறான பதிவேற்றங்கள், இதுவரை அதன் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அரசால் அங்கீகாரம் செய்யப்படு வதில்லை. ஆனால், இந்த தளத்தில் இருந்து செய்யப்  படும் ஆவணப் பதிவேற்றத்துக்கு அரசு அங்கீகாரம் தந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் சுமார் 14 லட்சம் ஆவணங்களை இதில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானா லும் உங்கள் ஆவணங் களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் (Any Time, Any Where, Share your Documents Online) என்ற கோட்பாட்டில் அரசால் துவங்கப் பட்டுள்ள, வரவேற்று பயன்படுத்தவேண்டிய அரசின் பெட்டகம் இது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது ஆவணங்களை தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம் - காட்டன் கைலிகள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம் - காட்டன் கைலிகள்





ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்த ஊர் ஈரோட்டுக்கு அருகில் இருந்தாலும் நாமக்கல் மாவட்ட எல்லையில் வருகிறது. சின்ன ஊர்தான் என்றாலும், இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலி தரத்துக்குப் பெயர் போனவை! இதுபற்றி நம்மிடம் பேசினார் குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேகர்.

''குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற  பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே நாங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம். அதாவது, தமிழக அளவில் காட்டன் கைலிகள் தயாரிப்பதில் தாய் வீடு குமாரபாளையம்தான் என்றே சொல்லலாம்.

இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இங்கு எப்போதும் வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. தற்போதுகூட வேலை செய்வதற்கான ஆட்களுக்குக் கடும் பற்றாக்குறை இருக்கிறது.

கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில்       கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறையை குமாரபாளையத்தில் உள்ளவர்களே கண்டுபிடித்தனர். நீண்டநாள் உழைக்கிற மாதிரி பல்வேறு புதிய வழிகளையும் எங்கள் ஊர் மக்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. இதன் விலை குமாரபாளையத்தில் 120 ரூபாய். ஆனால், வெளியூர்களில் இதன் விலை 150 ரூபாய். இரண்டாம் தரமான லுங்கிகள் இங்கு 80 ரூபாய்க்கே வாங்கலாம். இதை வெளியூர்களில் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள் பலர்'' என்றார் சேகர்.



கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். இதன் விலை ஒரு கிலோ 70 ரூபாய். இங்கு கிலோ கணக்கில் வாங்கி வருவதை வெளியூர்களில் தனித்தனியாக வெட்டி விற்பனை செய்துவிடுகிறார்கள்.

இனி ஈரோடு பக்கம் செல்பவர்கள் குமாரபாளையத்திற்கும் ஒரு விசிட் அடித்தால் குறைந்த விலையில் தரமான கைலிகளையும், துண்டுகளையும் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வரலாமே!

டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி!

டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி!



 மதியமோ அல்லது இரவோ சாப்பிட்டு முடிந்தவுடன் வெற்றிலை போட்டு மெல்லும் பழக்கம் நம்மவர்களிடம் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்த வெற்றிலைபோடும் பழக்கம் மெள்ள மெள்ள மறைந்து, அந்த இடத்தைப் பிடித்துவிட்டது டூட்டி ஃபுரூட்டி (Tutti Frutti). சாப்பாடு முடிந்தவுடன் கொஞ்சம் இனிப்பாக எதையாவது மென்று முழுங்க நினைப்பவர்கள் அனைவரும் இப்போது இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு அடிமை.
இதை அப்படியே கொஞ்சம் அள்ளி வாயில்போட்டுக் கொள்ளலாம் என்பதுபோக, ஐஸ்கிரீம், பன், பிஸ்கெட், பான் மசாலா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளிலும் பயன்படுத்தப்படும் இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு (ஜிuttவீ திக்ஷீuttவீ) தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும்கூட இதை ஒரு 'ரெப்ஃப்ரஷனராக’ சாப்பிட்டு மகிழ்கிறார்கள். பாலை அடிப் படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகிற பொருட்களில் கூடுதல் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. சமீபகாலமாக இப்பொருளுக்கானத் தேவை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
சந்தை வாய்ப்பு!
எல்லாத் தரப்பினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் இது. டூட்டி ஃபுரூட்டியின் சுவை அனைவராலும் விரும்பப்படுவது. இத்தொழிலில் பெரிய அளவில் இதுவரை பலரும் இறங்கவில்லை என்பது கூடுதல் வாய்ப்பு. இதை தயார் செய்வதன் மூலம் புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்கள், விரைவில் சந்தையைப் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தயாரிப்பு முறை!
பெரிய மற்றும் பழுக்காத பப்பாளியை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து தோல் சீவவேண்டும். பப்பாளியின் தோலை சீவுவது கையாலோ அல்லது இயந்திரத்தின் உதவியினாலோ செய்யலாம். பிறகு நீளவாக்கில் நறுக்கி அதிலுள்ள விதை மற்றும் நார்களை நீக்க வேண்டும். இதை கொதிக்கும் நீரில் எட்டு முதல் பத்து நிமிடங்கள் வைக்க வேண்டும். இந்த பதத்தில் இருக்கும் பப்பாளியை 30% சர்க்கரைப் பாகுடன், 3% சிட்ரிக் ஆசிட் கொண்ட கொதிக்கும் கலவையில் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இதன்பிறகு இந்தக் கலவையை 8-10 மணி நேரம் ஆறவிட்டு தேவையான நிறத்தை சேர்த்து உலர வைக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவுகளில் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி 60 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் டிரையர் இயந்திரத்தில் பத்து நிமிடங்கள் உலரவிட்டு, மீண்டும் கொஞ்சம் குளிர வைத்தால் சுவையான டூட்டி ஃபுரூட்டி தயார். இதை அழகாக பேக்கிங் செய்தால்போதும், மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றுவிடலாம்.
கட்டடம்!
இத்தொழிலுக்கு நிலம் வாங்கவோ, கட்டடம் கட்டவோ தேவையில்லை. குறைந்த அளவிலான முதலீட்டைக் கொண்டு பிஸினஸைத் தொடங்கலாம். பேக்கிங் செய்வதற்கும் தயாரித்த பொருளை சேகரித்து வைக்கவும் இடம் தேவைப்படும். மற்றபடி வீட்டிலேயே தயார் செய்யலாம்.

இயந்திரம்!
ஓராண்டுக்கு 60 டன் எடை கொண்ட டூட்டி ஃபுரூட்டியை இரண்டு ஷிஃப்ட்களில் வேலை பார்த்தால் தயார் செய்துவிடலாம். இத்தொழிலுக்கான இயந்திரங்கள் பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கும்.
மற்றச் செலவுகள்!
ஃபர்னிச்சர், அளக்கும் இயந்திரங்கள் போன்ற செலவுகளுக்கு 25,000 ரூபாய் வரை செலவாகும்.

தண்ணீர் மற்றும் மின்சாரம்!
10 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும். அத்துடன் 1000-1200 லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படும்.

மூலப்பொருள்!
இத்தொழிலின் முக்கிய மூலப்பொருளான பப்பாளி தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் தாராளமாகக் கிடைக்கிறது. சர்க்கரை சுலபமாக சந்தையில் கிடைக்கக் கூடியதுதான். சர்க்கரைப் பாகு காய்ச்சும் போது சுமார் 25% வரை கழிவுபோக வாய்ப்பிருக்கிறது. ஆண்டுக்கு 60 டன் டூட்டி ஃபுரூட்டி தயாரிக்க வேண்டுமெனில் 80 டன் பப்பாளி தேவைப்படும். மற்ற மூலப்பொருள்களான கலர், சிட்ரிக் ஆசிட் போன்றவைகளும் எளிதில் கிடைக்கக் கூடியதுதான்!
வேலையாட்கள்!
இத்தொழிலுக்கு நல்ல திறமையான வேலையாட்கள் இரண்டு பேர், சாதாரண வேலையாட்கள் நான்கு பேர், விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஏழு பேர் தேவைப்படுவார்கள்.
கொஞ்சம் இடம், கொஞ்சம் மூலதனம் இருந்தால் குறுகியகாலத்தில் சக்சஸ் பண்ண இது சரியான தொழில்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள்




இத்தனை சிறப்புகளையும் கொண்ட மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்ம ஈரோடுதான். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிக அளவில் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்றே பெயர். இந்தியாவில் உற்பத்தியாகின்ற மஞ்சளில் 23 சதவிகித மஞ்சள் இங்குதான் உற்பத்தியாகிறதாம். எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈரோடு மார்க்கெட்டைத்தான் நம்பி இருக்கின்றனர். விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதற்கு இங்குள்ள வேளாண்மை மையம் உதவி செய்கிறது. இங்கு உற்பத்தியாகின்ற மஞ்சளை விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து ஈரோடு மஞ்சள் விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ''தமிழகத்தைவிட ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், ஈரோட்டில்தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயம் நடக்கிறது. அதற்குக் காரணம் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்குள்ள மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து இருப்பதுதான். ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சார்ந்த பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு நிறம் அடர்த்தியாக இருப்பதால் எப்போதுமே ஈரோட்டு மஞ்சளுக்கு மவுசு அதிகம்'' என்கிறார்கள்.

இங்குள்ள வேளாண் விற்பனை சந்தையில் மட்டும் கடந்த வருடம் 70 லட்சம் மஞ்சள் மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. பொதுவாக மருந்து தயாரிப்பு மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள் தங்களது முகவர்கள் மூலம் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் இங்குதான் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகளிடமிருந்து நேரடியாகச் சந்தைக்கு வரும்  மஞ்சளை அப்படியே பயன்படுத்த முடியாது. அதை வாங்கிச்சென்று பதப்படுத்தி, பாலிஷ் செய்துதான் பயன்பாட்டுக்கான மஞ்சளாக மாற்றுகிறார்கள்.

ஈரோட்டிலுள்ள வேளாண் விற்பனை மையத்தில் தினசரி காலை மஞ்சள் விற்பனை ஜரூராக நடக்கிறது. இங்கு 100 கிலோ கொண்ட மூட்டைகள் தர வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்கள் தேவைக்கேற்ப மூட்டைகளை வாங்கிச் சென்று, பதப்படுத்தி சில்லறை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

ஈரோடு மையப் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் வேளாண்மை விற்பனை மையத்தில்தான் மொத்த விற்பனை நடக்கும் என்றாலும், இதற்கு அருகிலேயே மஸ்ஜித் தெரு மற்றும் கந்தசாமி செட்டி தெருக்களில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் சகாய விலைக்கு மஞ்சள் கிழங்கு வாங்கிவிட முடியும். இங்கிருந்துதான் பல்வேறு ஊர்களுக்கும் சிறு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாக, வெளியூர்களில் கிலோ 90 முதல் 120 வரை விற்கும் மஞ்சளை இங்கு 70 ரூபாய்க்கு வாங்கலாம். தரத்தைப் பொறுத்து விலை வித்தியாசம் இருக்கும். அக்கம்பக்கத்தினருக்கும் சேர்த்து வாங்கும்போது 50 கிலோவாக வாங்கினால் இன்னும் குறைவான விலையில் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஐம்பது வீடு, நூறு வீடு என வசிக்கும் ஃப்ளாட்வாசிகள், சிறிய குடியிருப்புவாசிகள் கூட்டாகச் சேர்ந்து ஈரோட்டில் மொத்தமாக மஞ்சளை வாங்கினால், கிலோவிற்கு 30 முதல் 40 ரூபாய் வரை குறைவாகக் கிடைக்கும். இனி, ஈரோடு செல்பவர்கள் மறக்காமல்

மஞ்சளை வாங்கி வரலாமே!