வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ், ராம்ராஜ் காட்டன்.

வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ், ராம்ராஜ் காட்டன்.



சில வருடங்களில் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து பிஸினஸ் செய்யலாம் என தனியாக வந்தோம்.  நண்பர் உற்பத்தியைக் கவனிக்க, நான் மார்க்கெட்டிங் செய்தேன். இந்த வேலைக்காக தென் மாநிலங்களிலும் ஊர் ஊராகவும் அலைந்து ஆர்டர் வாங்கினேன். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய நிலை. நிறுவனத்தைப் பிரித்தபோது எனது பங்காக 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வேஷ்டிகளை என்னிடம் தந்தார். அதை விற்று காசாக்க மீண்டும் மார்க்கெட்டிங் வேலையில் இறங்கினேன். கையில் இருக்கும் வேஷ்டிகளை விற்று முடித்தாலும், புதிய ஆர்டர்களையும் விட  முடியவில்லை. பல இடங்களிலிருந்தும் வேஷ்டி வாங்கித் தந்தேன்.
அடுத்தவரிடமிருந்து வாங்கித் தருவதற்குப் பதில் நாமே தயாரித்தால் என்ன என்று நினைத்து வேஷ்டி தயாரிப்பில் இறங்கினேன். வேஷ்டி என்றாலே கைத்தறிதான் என்பதை மாற்றி, விசைத்தறி மூலம் வெவ்வேறு ரகங்களில் தந்தேன். எளிமையாக, வாங்கக்கூடிய விலையில் தரமாக கிடைத்த வேஷ்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
வேஷ்டி தயாரிப்பில் இருந்ததால் நான் எங்கு சென்றாலும் வேஷ்டியில்தான் செல்வேன். பல இடங்களில் வேஷ்டி கட்டி சென்றதால் பல அவமானங்களையும் சந்திக்க நேர்ந்தது. வேஷ்டியை பாரம்பரியமான உடை என்று சொன்னாலும், பொது இடங்களில் வேஷ்டி கட்டி செல்பவர்களுக்கு சரியான மரியாதை இல்லை என்பதை உணர்ந்தேன். அதை மாற்றினால்தான் வேஷ்டி தொழிலில் ஜெயிக்க முடியும் என்று நினைத்து, அதற்காக வேலை செய்தேன். வெற்றி பெற்றவர்கள் விரும்பிக் கட்டுவது வேஷ்டி என்று விளம்பரங்கள் செய்தேன்.
வேஷ்டி என்றாலே வெள்ளைவெளேர் என்று ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை மாற்றி, பல்வேறு வகைகளிலும் தந்தோம். ஒவ்வொரு பகுதி மக்களும் விரும்பிக் கட்டும் வேஷ்டி ரகங்களை ஆராய்ந்து அதற்கேற்ப தயாரித்துக் கொடுத்தோம். இன்று 2,008 ரகங்கள் உற்பத்தி செய்கிறோம். வேஷ்டியையும், வேஷ்டி கட்டுபவர்களையும் தாழ்வாக நினைத்த நிலையை மாற்றி, வேஷ்டி கட்டுவதைக் கவுரவமாகவும், வேஷ்டியை ஒரு பிராண்டாகவும் மாற்றியதுதான் எங்கள் சாதனை.''

வங்கிக் கணக்கு ஜாக்கிரதை !

வங்கிக் கணக்கு ஜாக்கிரதை !



கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்யத் தயங்குபவர்கள், தவறாமல் பர்ஸில் வைத்திருப்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத்தான். இந்த இரண்டுமே பாதுகாப்பானவை என்று நினைக்கிறார்கள் பலர். ஆனால், இந்த இரண்டு கார்டுகளையும் நாம் பத்திரமாக வைத்துக்கொள்ளவில்லை எனில், நம் பணம் களவுபோக நிச்சயம் வாய்ப்புண்டு. இந்த இரண்டு கார்டுகளை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இனி பார்ப்போம்.

டெபிட் கார்டு என்கிற தொழில்நுட்பமே அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதல்ல. நீங்கள் ஸ்வைப் செய்யும் பாதுகாப்பு குறைவான இடங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பயன்படுத்தி எளிதாக போலி கார்டுகளைத் தயாரித்துவிட முடியும். நீங்கள் பெட்ரோல் போடும் இடத்திலோ அல்லது மால்களில்  ஷாப்பிங் செய்யும் போதோ அல்லது ஹோட்டல்களில்  உணவருந்தும்போதோ உங்கள் டெபிட் கார்டில் இருக்கும் ரகசியத் தகவல்களை எளிதாக எடுத்துவிட முடியும். சில சமயம் உங்கள் வங்கி ஏடிஎம் மையங்களில் கார்டை நுழைக்கும் இடத்தில்கூட இந்த மோசடிக்காரர்கள் சிறிய அளவிலான ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி தகவல்களையும் பெர்சனல் பின் நம்பரையும் திருடிவிடுவார்கள்.

டெபிட் கார்டில்தான் இந்தப் பிரச்னையா என்றால், கிரெடிட் கார்டிலும் இதேபோன்ற குறைபாடுகள் உள்ளன. ஆனால், டெபிட் கார்டில் நம் பின் நம்பரை கேட்காமலேயே பணப் பரிவர்த்தனை செய்யும் ‘பைபாஸ்’ வசதி இருக்கிறது. கிரெடிட் கார்டிலும் இந்த வசதி இருந்தது. தற்போது அப்டேட் செய்யப்பட்ட கார்டுகளில் உங்கள் பின் நம்பரை கட்டாயம் தந்தால் தான் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும்.



உங்கள் கிரெடிட் கார்டின் பின் நம்பர் தெரிந்தால், அதை வைத்து புதிய கிரெடிட்   கார்டை குளோனிங் முறையில் தயாரித்துவிட முடியும். இதை வைத்து உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுத்துவிட முடியும்.

எப்படி பாதுகாப்பது?

பொது இடங்களில் உங்கள் கண்களுக்கு எதிரே வைத்து கார்டுகளை ஸ்வைப் செய்ய அனுமதியுங்கள். கூடியமட்டும் நீங்களே பின் நம்பரை பதிவு செய்யுங்கள். மறைவான இடத்துக்குச் சென்று கார்டை ஸ்வைப் செய்வதை அனுமதிக் காதீர்கள்.

கார்டுகளை ஸ்வைப் செய்யும் கருவியின்மேல் ஏதாவது தனி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள். அப்படி பொருத்தப் பட்டிருந்தால் அது ஸ்கிம்மர் கருவியாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியொரு சந்தேகம் உங்களுக்கு வரும்பட்சத்தில், உங்கள் கார்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் பொருட்களை வாங்கும் கடைகளிலோ, பொது இடங்களிலோ வெளிப்படையாக உங்கள் பின்நம்பரை கூறாதீர்கள். அந்தக் கடைக்காரரோ அல்லது அருகில் இருப்பவரோ உங்கள் பின் நம்பரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

பின் நம்பர் இல்லாமலே பைபாஸ் செய்து உங்கள் கணக்கிலிருந்து வேறு ஒரு கணக்குக்கு ஆன்லைன் மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால், அதை செய்ய முடியாதபடிக்கு உள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இன்டர்நெட் பேங்கிங்!

கிரெடிட், டெபிட் கார்டுகள் ஆபத்தானவை. எனவேதான், நான் வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் வசதியை ஆக்டிவேட் செய்துள்ளேன். இதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று நினைக்கிறார்கள் சிலர். ஆன்லைன் ஹேக்கர்கள் மூலம் ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

என்ன பிரச்னை?

உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் பயன்படுத்தும் கணினியை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தாலும், இன்டர்நெட்டில் தோன்றும் விளம்பரங்கள் சில பிரபல இ-மெயில் தளங்களைப் போன்றும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த போலி இணையதளங்கள் ‘பிஷ்ஷிங்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் இ-மெயிலின் பாஸ்வேர்டு தெரிந்து கொண்டால் போதும். உங்கள் பெர்சனல் விஷயங்கள் அனைத்தும் திருடப்படுவதற்கு வாய்ப்புண்டு.

இந்தத் தளங்களில் சென்று நீங்கள் ஆன்லைனில் உங்கள் வங்கிக் கணக்கு விவரத்தையோ அல்லது கார்டுகளின் விவரத்தையோ அளிக்கும்போது, அது அவர்களது ஹேக்கிங் தளமாக இருக்கும் பட்சத்தில், பதிவாகிய தகவல்களை அவர்கள் எளிதாக எடுத்துவிடுவார்கள். நீங்கள் அவசரத்துக்காக அருகில் உள்ள ஒரு பிரவுஸிங் சென்டருக்குச் சென்று ஒரு வங்கிப் பரிவர்த்தனை செய்ய நேரிடலாம். ஒருவேளை அந்த பிரவுஸிங் சென்டர் ஸ்கிரீன் கேப்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீங்கள் கணினி திரையில் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கலாம்.

எப்படி பாதுகாப்பது?

அலுவலக அல்லது வீட்டு கணினிகளைப் பயன்படுத்தும்போது,  இ-மெயில் அல்லது ஷாப்பிங் இணையதளங்களை பார்வையிட, அதன் பாஸ்வேர்டை  நீங்களே டைப் செய்து உள்நுழைவது சிறந்தது. பொது பிரவுஸிங் சென்டரில் லாக் இன் செய்யும்போது கவனமாக உங்கள் அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு ‘ஹிஸ்டரி’யில் பதிவான பதிவுகளை அழிக்கத் தவறாதீர்கள். அதோடு நிற்காமல் பிரவுஸர் அமைப்பில் உள்ள குக்கீஸ் பதிவுகளையும் டெலிட் செய்துவிட்டு செல்லும்போது உங்கள் பாஸ்வேர்டு திருடப்படுவது தவிர்க்கப்படும்.



நீங்கள் பயன்படுத்தும் கணினியில் நீங்கள் மவுஸை நகர்த்தாமல் கர்ஸர் எங்காவது நகர்கிறதா என்று கவனியுங்கள். அப்படி இருந்தால், உடனே அந்த கணினி மையத்தில் பிரவுஸிங் செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில், அந்த மையம் உங்களை ஸ்கிரீன் கேப்சரிங் அல்லது ஸ்கிரீன் வியூவர் மூலம் கண்காணிக் கிறது என்று அர்த்தம்.

உங்கள் செல்போனில் நீங்கள் இ-மெயில் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளை இணைத்து வைத்திருந்தால், அதனை யாரிடமும் காட்டாதீர்கள். இன்று பெரும்பாலான போன்களில் உள்ள ஷோ பாஸ்வேர்டு ஆப்ஷனைப் பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை எளிதாக எடுக்கலாம் என்பதால் அதில் கவனமாக இருங்கள்.

பேங்கிங் ஆப்ஸ்!

கார்டுகள், இன்டர்நெட் இவையெல்லாம் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இதனால் இனி இவற்றைவிட்டு நான் என் கையில் பாதுகாப்பாக உள்ள செல்போனில் மொபைல் பேங்கிங் ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தப் போகிறேன் என்பவர்களுக்கும் சிக்கல் உள்ளது.

என்ன பிரச்னை?

வங்கிகளின் பெயரிலேயே போலி ஆப்ஸ்கள் வலம்வர தொடங்கியுள்ளன. இந்த ஆப்ஸ்கள் உங்கள் வங்கியின் அமைப்பைப் போலவே இருக்கும் என்பதால், உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் இந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்துவிட்டால், இதில் நீங்கள் பதிவு செய்யும் உங்கள் வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. இந்த போலி ஆப்ஸ்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவிவருவதால் உங்கள் கணக்கின் விவரங்கள் போலி ஆப்ஸ் தயாரிப்பவர்கள் கையில் சிக்க அதிக வாய்ப்புள்ளது.

எப்படி பாதுகாப்பது?

ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யும்போது உங்கள் வங்கியை அணுகி சரியான ஆப்ஸுக்கான லிங்கை பெற்று டவுன்லோடு செய்வது சிறந்தது. அதை டவுன்லோடு செய்யும்முன், அது உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ சேனல் என்றால் மட்டும் டவுன்லோடு செய்யுங்கள்.

இப்படி நீங்கள் செய்யும் வங்கி பணப் பரிவர்த்தனை வசதிகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டில் இருந்து சமயோஜிதமாக யோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே உங்கள் பணம் திருடப்படுவதைத் தடுக்க முடியும். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள்

பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்!

பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்!


சமீபத்திய சென்னைப் பெருமழையில் வீடு, கார் சேதமானதுடன், பலரது விலை மதிப்பற்ற ஆவணங்களும் தண்ணீரில் நனைந்து நாசமாகின. பல இடங்களில் உடனடி ஆவணங்கள் வழங்கும் முகாம் நடத்தி, பலரது ஆவணங்களை தரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மழை, வெள்ளம், தீ என எந்தவிதமான இன்னல்கள் வந்தாலும் அதிலிருந்து உங்கள் ஆவணங்கள் எந்த வகையிலும் தீங்கு விளையாமல் பத்திரமாக வைத்திருப்பதற்கான வழி இப்போது பிறந்துள்ளது, அதுவும் இலவசமாக நயா, பைசா செலவில்லாமல்.

டிஜி லாக்கர் (Digi Locker) எனப்படும் இணையப் பெட்டகம்தான், நம்மிடம் இருக்கும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கும் புதுமையான வழி. இது ஆன்லைனில் இயங்குவதாகும் (Online Document Storage Facility). இதன் மூலம் நீங்கள் எந்தவொரு பிரச்னையும் இன்றி ஆவணங்களைப் பாதுகாத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தேவைப்படும் நபருக்கோ, துறைக்கோ அனுப்ப முடியும்.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஆவணங்களையும் தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘பேப்பர் இல்லா செயல்பாடு’    (Paperless Governance) என்கிற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் டிஜிட்டல் (Digital India) திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி தரப்பட்டிருப்பதுதான் இந்த டிஜி லாக்கர்.



தேவைகள்!

இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த உங்களிடம் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்த ஆதார் எண்ணும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணும் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அவர்களது இருப்பிட உறுதிக்கென பிற ஆவணங்களை கொடுத்து அதன் சரிபார்ப்பிற்கு பின்னர் இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த முடியும்.

பதிவு செய்வது அவசியம்!

இந்த டிஜி லாக்கரில் பதிவு செய்த பின்புதான் இந்தப் பெட்டகத்தை நீங்கள் பயன்படுத்த இயலும். இதற்கென இருக்கும் இணையதளத்திற்குச் சென்று (www.digilocker.gov.in),  உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்தபின்பு, நீங்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கு ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். உடனடியாக அந்த பாஸ்வேர்டு பதிவு செய்தபின்பு நமது கணக்கு ஒன்று, இதர விவரங்களை தெரிவித்தவுடன் திறக்கப்படும். பின்னர் உங்களது யூசர் நேம் (User Name) பாஸ் வேர்டைக் குறிப்பிட்டு உங்களுக்கான இந்தப் பெட்டகத்தை பயன்படுத்தலாம். ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, மின் வருடல் மூலமான ஆவணங்களாக இணையப் பெட்டகத்தில் இணைக்கப்படும்.

ஆவணங்களின் சேமிப்பு!

நமது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, இந்த இணையப் பெட்டகத்தில் ஃபைல்களாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவைகள் தனித்தனியே சேமித்து வைக்கப்படும் விதமாக, உங்களால் பதிவேற்றம் செய்விக்கப்படும் ஆவணங்கள், அப்போதே தனித்தனி ஃபைல்களில் உங்கள் ஆதார் எண்ணின் தனித்துவத்தின்படி சேமிக்கப்படும்.

எல்லாம் முடிந்து இந்தப் பெட்டகத்தில் உள்ள உங்கள் சுய விவரப்பக்கத்துக்கு சென்றால், அதில் உங்கள் புகைப்படம், பெயர், முகவரி போன்ற ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது நீங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து விவரங்களும் அந்த இணையதளத்திலிருந்து பெறப்பட்டு இங்கு பகிரப்பட்டிருக்கும்.

அளவு!

தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம். கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்து இதன் அளவும் உயர்த்தப்படவுள்ளது.



பாதுகாப்பு!

இது அனைத்து வகையிலும் பாதுகாப்பும் கொண்ட ஒரு சிஸ்டம். இதன் அமைப்பு மற்றும் மையமானது ஐஎஸ்ஓ 27001 (ISO 27001) சான்றிதழ் பெறப்பட்டதால், உங்கள் தனித்துவம் முழுவதுமாக பாதுகாக்கப்படும். அனுமதி இல்லாத பிற நபர்களின் பயன்பாடு ‘தானியங்கி நேரப் பாதுகாப்பு’ (Auto Time Log-Out) மூலம் தடை செய்யப்படும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பயனாளர் மட்டுமே இந்தப் பெட்டகத்திலிருந்து பயன்படுத்த முடியும். ஆதார் எண் இணைக்கப்படாதபட்சத்தில் பயனாளர்களின் ஆவணப் பிரிவில் ஆவணங்கள் இணைக்கப்பட்டதே காட்டப்படாது.

ஆவணங்களின் பயன்பாடு!

இணைய கையெழுத்து (e-Sign) எனும் தொழில்நுட்பம் இந்த இணையப் பெட்டகத்தில் முழுமையான அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கம்பெனி பதிவகங்கள் மற்றும் வருமான வரித்துறைகளில்தான் இந்த இணைய கையெழுத்து பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த டிஜி லாக்கரில் இணைய கையெழுத்து தொழில்நுட்பம் இந்தப் பெட்டகத்தில் உள்ள ஃபைல்களையும், ஆவணங்களையும், கையெழுத்து செய்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களைக்கூட இந்த முறையில் அனுப்ப முடியும். மேலும், ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பெட்டகத்தில் இருந்து பதிவேற்றி நேரடியாக அனுப்ப இயலும். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்.



கூகுள் போன்ற இதர தளங்களிலிருந்து செய்யப்படும் அவ்வாறான பதிவேற்றங்கள், இதுவரை அதன் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அரசால் அங்கீகாரம் செய்யப்படு வதில்லை. ஆனால், இந்த தளத்தில் இருந்து செய்யப்  படும் ஆவணப் பதிவேற்றத்துக்கு அரசு அங்கீகாரம் தந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் சுமார் 14 லட்சம் ஆவணங்களை இதில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானா லும் உங்கள் ஆவணங் களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் (Any Time, Any Where, Share your Documents Online) என்ற கோட்பாட்டில் அரசால் துவங்கப் பட்டுள்ள, வரவேற்று பயன்படுத்தவேண்டிய அரசின் பெட்டகம் இது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது ஆவணங்களை தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம் - காட்டன் கைலிகள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம் - காட்டன் கைலிகள்





ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்த ஊர் ஈரோட்டுக்கு அருகில் இருந்தாலும் நாமக்கல் மாவட்ட எல்லையில் வருகிறது. சின்ன ஊர்தான் என்றாலும், இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலி தரத்துக்குப் பெயர் போனவை! இதுபற்றி நம்மிடம் பேசினார் குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேகர்.

''குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற  பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே நாங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம். அதாவது, தமிழக அளவில் காட்டன் கைலிகள் தயாரிப்பதில் தாய் வீடு குமாரபாளையம்தான் என்றே சொல்லலாம்.

இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இங்கு எப்போதும் வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. தற்போதுகூட வேலை செய்வதற்கான ஆட்களுக்குக் கடும் பற்றாக்குறை இருக்கிறது.

கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில்       கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறையை குமாரபாளையத்தில் உள்ளவர்களே கண்டுபிடித்தனர். நீண்டநாள் உழைக்கிற மாதிரி பல்வேறு புதிய வழிகளையும் எங்கள் ஊர் மக்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. இதன் விலை குமாரபாளையத்தில் 120 ரூபாய். ஆனால், வெளியூர்களில் இதன் விலை 150 ரூபாய். இரண்டாம் தரமான லுங்கிகள் இங்கு 80 ரூபாய்க்கே வாங்கலாம். இதை வெளியூர்களில் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள் பலர்'' என்றார் சேகர்.



கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். இதன் விலை ஒரு கிலோ 70 ரூபாய். இங்கு கிலோ கணக்கில் வாங்கி வருவதை வெளியூர்களில் தனித்தனியாக வெட்டி விற்பனை செய்துவிடுகிறார்கள்.

இனி ஈரோடு பக்கம் செல்பவர்கள் குமாரபாளையத்திற்கும் ஒரு விசிட் அடித்தால் குறைந்த விலையில் தரமான கைலிகளையும், துண்டுகளையும் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வரலாமே!

டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி!

டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி!



 மதியமோ அல்லது இரவோ சாப்பிட்டு முடிந்தவுடன் வெற்றிலை போட்டு மெல்லும் பழக்கம் நம்மவர்களிடம் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்த வெற்றிலைபோடும் பழக்கம் மெள்ள மெள்ள மறைந்து, அந்த இடத்தைப் பிடித்துவிட்டது டூட்டி ஃபுரூட்டி (Tutti Frutti). சாப்பாடு முடிந்தவுடன் கொஞ்சம் இனிப்பாக எதையாவது மென்று முழுங்க நினைப்பவர்கள் அனைவரும் இப்போது இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு அடிமை.
இதை அப்படியே கொஞ்சம் அள்ளி வாயில்போட்டுக் கொள்ளலாம் என்பதுபோக, ஐஸ்கிரீம், பன், பிஸ்கெட், பான் மசாலா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளிலும் பயன்படுத்தப்படும் இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு (ஜிuttவீ திக்ஷீuttவீ) தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும்கூட இதை ஒரு 'ரெப்ஃப்ரஷனராக’ சாப்பிட்டு மகிழ்கிறார்கள். பாலை அடிப் படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகிற பொருட்களில் கூடுதல் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. சமீபகாலமாக இப்பொருளுக்கானத் தேவை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
சந்தை வாய்ப்பு!
எல்லாத் தரப்பினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் இது. டூட்டி ஃபுரூட்டியின் சுவை அனைவராலும் விரும்பப்படுவது. இத்தொழிலில் பெரிய அளவில் இதுவரை பலரும் இறங்கவில்லை என்பது கூடுதல் வாய்ப்பு. இதை தயார் செய்வதன் மூலம் புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்கள், விரைவில் சந்தையைப் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தயாரிப்பு முறை!
பெரிய மற்றும் பழுக்காத பப்பாளியை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து தோல் சீவவேண்டும். பப்பாளியின் தோலை சீவுவது கையாலோ அல்லது இயந்திரத்தின் உதவியினாலோ செய்யலாம். பிறகு நீளவாக்கில் நறுக்கி அதிலுள்ள விதை மற்றும் நார்களை நீக்க வேண்டும். இதை கொதிக்கும் நீரில் எட்டு முதல் பத்து நிமிடங்கள் வைக்க வேண்டும். இந்த பதத்தில் இருக்கும் பப்பாளியை 30% சர்க்கரைப் பாகுடன், 3% சிட்ரிக் ஆசிட் கொண்ட கொதிக்கும் கலவையில் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இதன்பிறகு இந்தக் கலவையை 8-10 மணி நேரம் ஆறவிட்டு தேவையான நிறத்தை சேர்த்து உலர வைக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவுகளில் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி 60 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் டிரையர் இயந்திரத்தில் பத்து நிமிடங்கள் உலரவிட்டு, மீண்டும் கொஞ்சம் குளிர வைத்தால் சுவையான டூட்டி ஃபுரூட்டி தயார். இதை அழகாக பேக்கிங் செய்தால்போதும், மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றுவிடலாம்.
கட்டடம்!
இத்தொழிலுக்கு நிலம் வாங்கவோ, கட்டடம் கட்டவோ தேவையில்லை. குறைந்த அளவிலான முதலீட்டைக் கொண்டு பிஸினஸைத் தொடங்கலாம். பேக்கிங் செய்வதற்கும் தயாரித்த பொருளை சேகரித்து வைக்கவும் இடம் தேவைப்படும். மற்றபடி வீட்டிலேயே தயார் செய்யலாம்.

இயந்திரம்!
ஓராண்டுக்கு 60 டன் எடை கொண்ட டூட்டி ஃபுரூட்டியை இரண்டு ஷிஃப்ட்களில் வேலை பார்த்தால் தயார் செய்துவிடலாம். இத்தொழிலுக்கான இயந்திரங்கள் பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கும்.
மற்றச் செலவுகள்!
ஃபர்னிச்சர், அளக்கும் இயந்திரங்கள் போன்ற செலவுகளுக்கு 25,000 ரூபாய் வரை செலவாகும்.

தண்ணீர் மற்றும் மின்சாரம்!
10 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும். அத்துடன் 1000-1200 லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படும்.

மூலப்பொருள்!
இத்தொழிலின் முக்கிய மூலப்பொருளான பப்பாளி தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் தாராளமாகக் கிடைக்கிறது. சர்க்கரை சுலபமாக சந்தையில் கிடைக்கக் கூடியதுதான். சர்க்கரைப் பாகு காய்ச்சும் போது சுமார் 25% வரை கழிவுபோக வாய்ப்பிருக்கிறது. ஆண்டுக்கு 60 டன் டூட்டி ஃபுரூட்டி தயாரிக்க வேண்டுமெனில் 80 டன் பப்பாளி தேவைப்படும். மற்ற மூலப்பொருள்களான கலர், சிட்ரிக் ஆசிட் போன்றவைகளும் எளிதில் கிடைக்கக் கூடியதுதான்!
வேலையாட்கள்!
இத்தொழிலுக்கு நல்ல திறமையான வேலையாட்கள் இரண்டு பேர், சாதாரண வேலையாட்கள் நான்கு பேர், விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஏழு பேர் தேவைப்படுவார்கள்.
கொஞ்சம் இடம், கொஞ்சம் மூலதனம் இருந்தால் குறுகியகாலத்தில் சக்சஸ் பண்ண இது சரியான தொழில்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள்




இத்தனை சிறப்புகளையும் கொண்ட மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்ம ஈரோடுதான். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிக அளவில் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்றே பெயர். இந்தியாவில் உற்பத்தியாகின்ற மஞ்சளில் 23 சதவிகித மஞ்சள் இங்குதான் உற்பத்தியாகிறதாம். எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈரோடு மார்க்கெட்டைத்தான் நம்பி இருக்கின்றனர். விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதற்கு இங்குள்ள வேளாண்மை மையம் உதவி செய்கிறது. இங்கு உற்பத்தியாகின்ற மஞ்சளை விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து ஈரோடு மஞ்சள் விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ''தமிழகத்தைவிட ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், ஈரோட்டில்தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயம் நடக்கிறது. அதற்குக் காரணம் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்குள்ள மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து இருப்பதுதான். ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சார்ந்த பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு நிறம் அடர்த்தியாக இருப்பதால் எப்போதுமே ஈரோட்டு மஞ்சளுக்கு மவுசு அதிகம்'' என்கிறார்கள்.

இங்குள்ள வேளாண் விற்பனை சந்தையில் மட்டும் கடந்த வருடம் 70 லட்சம் மஞ்சள் மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. பொதுவாக மருந்து தயாரிப்பு மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள் தங்களது முகவர்கள் மூலம் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் இங்குதான் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகளிடமிருந்து நேரடியாகச் சந்தைக்கு வரும்  மஞ்சளை அப்படியே பயன்படுத்த முடியாது. அதை வாங்கிச்சென்று பதப்படுத்தி, பாலிஷ் செய்துதான் பயன்பாட்டுக்கான மஞ்சளாக மாற்றுகிறார்கள்.

ஈரோட்டிலுள்ள வேளாண் விற்பனை மையத்தில் தினசரி காலை மஞ்சள் விற்பனை ஜரூராக நடக்கிறது. இங்கு 100 கிலோ கொண்ட மூட்டைகள் தர வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்கள் தேவைக்கேற்ப மூட்டைகளை வாங்கிச் சென்று, பதப்படுத்தி சில்லறை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

ஈரோடு மையப் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் வேளாண்மை விற்பனை மையத்தில்தான் மொத்த விற்பனை நடக்கும் என்றாலும், இதற்கு அருகிலேயே மஸ்ஜித் தெரு மற்றும் கந்தசாமி செட்டி தெருக்களில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் சகாய விலைக்கு மஞ்சள் கிழங்கு வாங்கிவிட முடியும். இங்கிருந்துதான் பல்வேறு ஊர்களுக்கும் சிறு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாக, வெளியூர்களில் கிலோ 90 முதல் 120 வரை விற்கும் மஞ்சளை இங்கு 70 ரூபாய்க்கு வாங்கலாம். தரத்தைப் பொறுத்து விலை வித்தியாசம் இருக்கும். அக்கம்பக்கத்தினருக்கும் சேர்த்து வாங்கும்போது 50 கிலோவாக வாங்கினால் இன்னும் குறைவான விலையில் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஐம்பது வீடு, நூறு வீடு என வசிக்கும் ஃப்ளாட்வாசிகள், சிறிய குடியிருப்புவாசிகள் கூட்டாகச் சேர்ந்து ஈரோட்டில் மொத்தமாக மஞ்சளை வாங்கினால், கிலோவிற்கு 30 முதல் 40 ரூபாய் வரை குறைவாகக் கிடைக்கும். இனி, ஈரோடு செல்பவர்கள் மறக்காமல்

மஞ்சளை வாங்கி வரலாமே!

பேக்கரி அயிட்டங்கள் தயாரிப்பு!

பேக்கரி அயிட்டங்கள் தயாரிப்பு!


கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையறாக்கள்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.
ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.
சந்தை வாய்ப்பு!

உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன. இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறுவிதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள். இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.                  

தயாரிப்பு முறை!
மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு  பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.
அனுமதி!
பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். மேலும், பி.ஐ.எஸ். தரச்சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.

கட்டடம்!
ஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும். உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அல்லது அதிக அளவில் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
இயந்திரம்!
ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற  இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.

மற்ற செலவுகள்!
ஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
தண்ணீரும் மின்சாரமும்!
20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.

மூலப்பொருள்!
இத் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருள் மாவுதான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.
வேலையாட்கள்!
இந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை. அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.
முந்தைய செலவுகள்!
பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.

செயல்பாட்டு மூலதனம்!
முதல் ஆண்டுக்கான மொத்த செயல்பாட்டு மூலதனமாக சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.
ரிஸ்க்!
ரஸ்க்கே தயாரித்தாலும் ரிஸ்க் இல்லாமல் இருக்குமா? தயாரிக்கும் பேக்கரி வகைகளை அன்றே விற்றுவிட வேண்டும். எனவே, தேவையைப் பொறுத்து தயாரிப்பது முக்கியம்.
சாதகமான விஷயம்!
பண்டிகைக் காலங்களில் அதிகப்படியான தேவைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங் களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்.
தற்போது குழந்தைகளின் பிறந்தநாளை மிக விமரிசை யாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதனால் பர்த்-டே கேக்கு களுக்கான ஆர்டர்களை வாங்கி செய்து கொடுக்க லாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடிவந்து பர்த்-டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது.  பிரகாசமான எதிர்காலம் உள்ள இத்தொழிலில் இறங்க இனி என்ன தயக்கம்?

Free Share Market Training

Free Share Market Training

Stock Market Training for beginners,Technical Analysis on Equity,Commodity,Forex Market,Learn Indian Equity Share Market Share Market Trading Basics: 
Fundamentals Of Share Market Trading training, Stock Market Basics - Share Market Trading Basics,Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)


           Click Here  & Register for Free Share Market Training
Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753

What happens to accounts of a NRI's NRE or FCNR accounts which he/she has opened abroad after his/her return to India?

What happens to accounts of a NRI's NRE or FCNR accounts which he/she has opened abroad after his/her return to India?

A returning Indian's NRE/FCNR accounts is usually designated as a Resident account. Most banks allow these deposits to continue to run till maturity at the contracted rate of interest.

          Click Here  & Register for Free Share Market Training
Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753

What are the multiples in which I can withdraw money from my FD?

What are the multiples in which I can withdraw money from my FD?


You can withdraw money from your FD in multiples of Rs 1,000/-

     Click Here  & Register for Free Share Market Training
Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753

What are nomination facilities available on FD?

What are nomination facilities available on FD?


The facility of Nomination is available for relationships in the names of individuals. Unless otherwise specifically given in writing by depositors, nomination in deposit accounts will be at Customer ID level.

   Click Here  & Register for Free Share Market Training
Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753

India invites US investments under Make in India scheme 30/08/2016 16:34

India invites US investments under Make in India scheme
30/08/2016 16:34
India today invited American investments under the Make In India scheme, as the government strives to make the country a manufacturing hub.
Speaking at the US-India CEO Forum, which was attended by US Secretary of Commerce Penny Pritzker and several top Indian industrialists, Commerce Minister Nirmala Sitharaman invited the American investment to the country.
The meeting was as part of the second strategic and commercial dialogue, which happened between India and the US today.
Top Indian industrialists and bankers including Cyrus Mistry, Sunil Bharti Mittal, Deepak Parekh, Kumar Mangalam Birla, Chanda Kochhar, Anand Mahindra, and Hari S Bhartia, were present at the meeting.
During the meeting, India and the US held detailed discussions on infrastructure funding and renewable energy, and ways to promote innovation and entrepreneurship, said sources.

RBI sets rupee reference rate at 67.0879 against US dollar 30/08/2016 14:44

RBI sets rupee reference rate at 67.0879 against US dollar
30/08/2016 14:44

The Reserve Bank of India today fixed the reference rate of the rupee at 67.0879 against the US dollar and 74.9439 for the euro.
These rates were at 67.1810 and 75.1823 respectively, yesterday.
According to an RBI statement, the exchange rates for the pound and the yen against the rupee were quoted at 87.6906 and 65.61 per 100 yens respectively, based on reference rates for the dollar and cross-currency quotes at noon.
The SDR-rupee figure will be based on this rate, the statement added.

India, US sign agreement to share military assets and bases 30/08/2016 12:54

India, US sign agreement to share military assets and bases
30/08/2016 12:54

India and the US has signed an important agreement to use each other's land, air and naval bases for repair and resupply, taking a step toward reinforcing defence ties as they seek to counter an aggressive China.
"The US has agreed to elevate defence trade and technology sharing with India to a level commensurate with its closest allies and partners," said a joint statement after the pact was signed.
At a press conference with US Defence Secretary Ash Carter, Defence Minister Manohar Parrikar said the agreement will allow the Indian and US navies to have an easier time supporting each other in joint operations and exercises and when providing humanitarian assistance.
The agreement is seen as a milestone in the India-US defence relationship because of the outsized political importance it had taken on in India, where concerns were raised over whether the country's autonomy would be undermined. But both leaders made it clear that the logistics agreement did not allow the basing of US troops in India.
The signing of the agreement will "make the logistics of joint operations so much easier and so much more efficient," said Mr Carter.
Washington's desire for deeper security cooperation with India had been complicated without the signing of the logistics agreement as well as two other pacts that would allow secure communications and the exchange of nautical and other data.
Mr Parrikar's visit to Washington this week marks his sixth interaction with Mr Carter, who has made closer military ties with India a priority and also established a special unit within the Pentagon last year for this.
Without naming China, both leaders mentioned the importance of the free flow of trade to both countries.
"India and the United States have a shared interest in freedom of navigation and overflight and unimpeded commerce as part of rule-based order in (the) Indo-Pacific,"Parrikar said.

Fifth tranche of sovereign gold bonds scheme to open on Sept 1 30/08/2016 12:51


Fifth tranche of sovereign gold bonds scheme to open on Sept 1
30/08/2016 12:51
The Reserve Bank of India, in consultation with the Government of India, has decided to issue fifth tranche of Sovereign Gold Bonds from September 1st.
“Applications for the bond will be accepted from September 01, 2016 to September 09, 2016” RBI said in a notification.
The Bonds will be issued on September 23, 2016, it said.
The Bonds will be sold through banks, Stock Holding Corporation of India Limited (SHCIL), designated post offices, and recognised stock exchanges viz., National Stock Exchange of India Limited and Bombay Stock Exchange.
The gold bonds investor will be compensated at a fixed interest rate of 2.75 per cent per annum payable semi-annually on the initial value of investment, which will be taxable as per the provision of Income Tax Act, 1961 (43 of 1961).
The capital gains tax arising on redemption of Sovereign gold bond to an individual has been exempted. The indexation benefits will be provided to long term capital gains arising to any person on transfer of bond.
Eligibility wise, the bonds will be restricted for sale to resident Indian entities including individuals, HUFs, Trusts, Universities and Charitable Institutions.
It will be denominated in multiples of gram(s) of gold with a basic unit of 1 gram.
The tenure of the Bond will be for a period of 8 years with exit option from 5th year to be exercised on the interest payment dates.

Harmonization of product standards to be key element of India-US joint policy 30/08/2016 12:40


Harmonization of product standards to be key element of India-US joint policy
30/08/2016 12:40
Harmonization of product standards will be one of the four major India-US joint policy objectives, according to the ‘Roundtable on Standards and Conformity Assessment.’
The roundtable held on the sidelines of the ongoing India-US Strategic and Commercial Dialogue was organized by the Confederation of Indian Industry (CII) in partnership with Ministry of Commerce and Industry, Government of India, the American National Standards Institute (ANSI) and the National Accreditation Board for Certification Bodies (NABCB).
Speaking at the conference, Chandrajit Banerjee, Director General, CII, said that CII is focusing on four key initiatives related to standards for promoting India’s trade competitiveness. These include technical inputs from experts and industry members, training and counselling for conformity assessment bodies in India and the SAARC region, the Standards Conclave that is organized in association with India’s Ministry of Commerce and Industry, and the soon-to-be-launched Standards online portal.
“Indian industry needs to adapt to meet increasingly stringent standards to boost its export competitiveness, or we will be left behind in the global trade race,” he said.
Heather Lanigan, Country Manager – South Asia, US Trade and Development Agency (USTDA), emphasized the importance of standards across different sectors like energy, telecommunications and infrastructure. The USTDA has particularly focused on power, infrastructure and smart cities. For example, they have worked on automation and standards implementation with TATA Power, which has resulted in the automation of 34 power grids that ensure reliable electricity supply for more than 7 million customers.

India, Myanmar ink pact to promote traditional medicine 30/08/2016 12:11


India, Myanmar ink pact to promote traditional medicine
30/08/2016 12:11
India and Myanmar have joined hands to enhance bilateral cooperation between the two countries in the field of traditional medicine.
Indian government today signed an agreement with the Government of Myanmar to enhance bilateral cooperation between the two countries.
Secretary, Ministry of Ayush Ajit Mohan Sharan and Minister of State for Foreign Affairs of Myanmar, U Kyaw Tin signed a Memorandum of Understanding (MoU) here, an official statement said.
Prime Minister Narendra Modi and President of Myanmar U Htin Kyaw were also present on the occasion.
"Myanmar is our gateway to South East Asia and ASEAN with which India has been seeking greater economic integration through India's 'Look East and Act East' Policy.
"In recent years, the relationship of the two countries has been marked by close contacts at the highest political level including cooperation in the field of health and medicine," the AYUSH Ministry statement said.

Indian economy lost momentum in April-June quarter: Poll 30/08/2016 10:38


Indian economy lost momentum in April-June quarter: Poll
30/08/2016 10:38
A Reuters poll has said that India's economic growth likely lost some momentum in the April-June quarter on cutbacks in domestic and global demand. The poll also found that economists expected the newly-passed goods and services tax to take time to have an impact on gross domestic product growth. For April-June, the median forecast of 40 economists was for GDP growth of 7.6 per cent from a year ago, slower than the 7.9 per cent in the previous quarter. The slower pace would still be rapid, by any standard. China reported 6.7 per cent annual growth for April-June, and the Philippines posted 7.0 per cent. As per reports, the latest reform from the government, the goods and services tax, should transform the country into a common market and is widely expected to add up to two per centage points to the GDP growth pace after implementation.

India, UK considering ways to boost trade ties: Min 30/08/2016 10:37


India, UK considering ways to boost trade ties: Min
30/08/2016 10:37
India and the UK have considered upon ways to boost the two-way trade besides possibility of negotiating a free trade agreement, said media reports. As per reports, the issues were discussed during the meeting between Commerce and Industry Minister Nirmala Sitharaman and UK's Secretary of State for International Trade Liam Fox. Commenting on the issue, Commerce and Industry Minister Nirmala Sitharaman told the media, “The UK is very keen on deepening economic relations with India. They want to talk a lot on better partnership. They can start the trade dialogue only after they come out from the EU." "yes there is a possibility of an FTA with the UK. No doubt about it. But obviously, UK is still a part of the EU. Only when they come out (that) is going to happen," she added. She also added that both the countries had decided to set up a joint working group which can go into the details of what is the kind of economic and commercial relationship which can be built and strengthened.

Stock Market Training - Chennai

Stock Market Training - Chennai

 Click Here  & Register To One to One Training
Free Share Market Training : 
Join Our Whatsapp No : 9841986753

Stock Market Training for beginners,
Technical Analysis on Equity,Commodity,Forex Market,
Learn Indian Equity Share Market Share Market Trading Basics

: Fundamentals Of Share Market Trading training,
 Stock Market Basics -
Share Market Trading Basics,
Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)

Click Here  & Register To Get 2 days Trial Tips
Free Share Market Training : 
Join Our Whatsapp No : 9841986753

To what asset class does a FD belong?

To what asset class does a FD belong?


Fixed deposits form a part of the debt investment of an investor's portfolio.

 Click Here  & Register To Get 2 days Trial Tips
Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753

Is there any auto renewal facility available on FD?

Is there any auto renewal facility available on FD?


Yes, you can opt for auto renewal at the time of opening the FD or anytime before the FD matures. Auto renewal allows your FD to get renewed automatically for the same period as the original deposit. However under auto renewal option the fixed deposit receipt is with the custody of the Bank and Memorandum of Deposit (MOD) is issued in lieu of fixed deposit receipt.

 Click Here  & Register To Get 2 days Trial Tips
Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753

Is TDS applicable on FDs?

Is TDS applicable on FDs?


Tax is deducted at source, from the interest on Fixed Deposits, as applicable, as per the Income Tax Act, 1961.

Merge govt policies to address housing shortage issue: Study 29/08/2016 14:19


Merge govt policies to address housing shortage issue: Study
29/08/2016 14:19
The union government should try to merge various policies at a point to address housing shortage issue in India, an ASSOCHAM-JLL joint study has said.
“The Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY), which mainly targets lower-end of pyramid, should be used to provide housing finance to the account owner, thereby directly catering to the targeted segment,” suggested the study titled ‘Affordable Housing Finance in India,’ jointly conducted by ASSOCHAM and JLL.
Economically weaker section (EWS) and low-income group (LIG) categories are generally not given access to loans because of many reasons like – lack of proper documentation, higher credit and default risk, unavailability of guarantor and others, it noted.
Besides, income of this category is either uneven throughout the year or is below the ‘viable threshold,’ to ensure repayment of the loan.
Absence of a developed market for financing home buying results in lacklustre supply because developers of affordable housing face a slowdown in absorption of constructed units, the study highlighted.
Development of affordable housing has consistently been a challenge due to reasons like – land cost and availability, practicality of affordable housing definition, complicated regulatory process for approvals and others.
Lack of financing option for land acquisition, poor adoption of technology in construction, dubious credentials of developers, under-developed mortgage finance market, tedious know your customer (KYC) norms, co-ordination and marketing of policy and higher cost of funds for housing finance companies (HFCs) are key supply-demand side challenges being faced by the affordable segment in India.
“Relaxing the norms specifically for affordable housing segment can boost the depth and width of housing financing market like for example, making state mandated Aadhar card an acceptable identification for getting a loan,” suggested the ASSOCHAM-JLL study.